இடைவெளி
தூக்கு என்பதற்கு
கூகூ என்கிறாய்
மிட்டாய் என்பதற்கு
கொன்னாயி என்கிறாய்
சோறு என்பதற்கு
புவ்வா என்கிறாய்
தேங்கியு என்பதற்கு
கொகியூ என்கிறாய்
மயில் என்பதற்கு
மீள் என்கிறாய்
எனக்கு என்பதற்கு
நானுக்கு என்கிறாய்
பிழைகளால்
பிரியம் வளர்கிறாய்
எனக்கு என்பதை
எனக்கு எனச் சொல்லும் வரை.
ஆதி.சரவணன்
************************************************************
ஏற்கனவே...
காற்றுக்காக ஜன்னல் திறந்து
உட்காரும்போது
தாழ்வார விட்டத்துக் கூட்டில்
விளையாடும்
ஊடல் குருவிகள்
தென்றலின் பாடலுக்குத்
தப்பாமல் தலையாட்டும்
தொட்டிப் பூக்கள்
வாசல் வரை வந்து
வாலாட்டி வழியனுப்பும்
எதிர் வீட்டு நாய்க்குட்டி
கட்டுமான இருக்கன்களைப் பிளந்து
வேர்விட்டு முளைத்திருக்கும்
பக்கத்து வீட்டு சுவர் மரக்கன்று
நேற்றைய உழைப்பின் கூலிக்காக
முதலாளி வீட்டு வாசலில்
காத்துக்கிடக்கும் தொழிலாளி
தட்டில் விழுந்த ஒற்றை நாணயத்தை
திரும்பித் திரும்பித் தடவிப் பார்க்கும்
பிச்சைக்காரன்
எல்லாப் பரப்பிலும்
சிதறிக்கிடக்கின்றன
காலம் ஏற்கனவே எழுதிய
கவிதைகள்.
நேசன்
************************************************************
யார் முதலில்
ஒரு விடுமுறை நாளின்
மழை ஓய்ந்த மாலைப் பொழுது
நகர வாழ்வின்
நரக ஓட்டங்களற்ற ஓய்வு
சிரிப்பும் களிப்புமாக
சிற்றுண்டி இடையே சிறு சர்ச்சை
'யார் முதலில் சாப்பிட்டது?'
நாட்டாமை செய்ய
நயமாக முன் வந்தது
நான்கு வயதுப் பெண் குழந்தை.
அப்பாவின் காதருகே
தளிர்க்கரம் குவித்து
செவ்விதழ் விரித்து
திருவாய் மலர்ந்தது
'அப்பா நீதான் ஃபர்ஸ்ட்'
அதேபோல் அம்மாவிடமும்
'அம்மா நீதான் ஃபர்ஸ்ட்'
அண்ணாவிடமும்கூட
'அண்ணா நீதான் ஃபர்ஸ்ட்'
இறுதியாக
தன் காதருகே
தளிர்க்கரம் குவித்து
தீர்ப்பைத் திருத்திச் சொன்னது
'நான்தான் ஃபர்ஸ்ட்'
எஸ்.பிரேமலதா
************************************************************
நீர்த்துவம்
தாமிரபரணியும்
குறுக்குத்துறையும்
உனக்குப் புரியாது.
காவிரியும்
கொள்ளிடமும்
எனக்குத் தெரியாது.
பாலாறு வந்தாலும்
வாராதே போனாலும்
அதுபோல வாராது.
வெட்டாறும்
சங்கராபரணியும்
அவனுக்குப் புரியாது.
நதியில்லாதவனுக்கு
சிறுவாணிபோல் அமையாது.
குளத்தின் சாகசங்கள்
ஏரிகள் அறியாது.
ஏரியின் படகுக்குகோ
வேறெதுவும் ஆகாது.
கடலின் சூட்சுமங்கள்
கிணறுகள் உணராது.
கிணற்று மீனின்
ரகசியங்களை
கடல் மீன் அறியாது.
அருவியின்
உன்மத்தத்தைச்
சுனை நீர் தாங்காது.
இருந்தால் மட்டும் வரும்
குழாய் நீர் போல
ஒரு நீரும் கிடையாது.
அக்வாஃபினா பக்கத்தில்
பிஸ்லெரி நெருங்காது.
நீரெல்லாம் ஒன்றானாலும்
நீரெல்லாம் ஒன்றாகாது.
சுந்தர்ஜி
தூக்கு என்பதற்கு
கூகூ என்கிறாய்
மிட்டாய் என்பதற்கு
கொன்னாயி என்கிறாய்
சோறு என்பதற்கு
புவ்வா என்கிறாய்
தேங்கியு என்பதற்கு
கொகியூ என்கிறாய்
மயில் என்பதற்கு
மீள் என்கிறாய்
எனக்கு என்பதற்கு
நானுக்கு என்கிறாய்
பிழைகளால்
பிரியம் வளர்கிறாய்
எனக்கு என்பதை
எனக்கு எனச் சொல்லும் வரை.
ஆதி.சரவணன்
************************************************************
ஏற்கனவே...
காற்றுக்காக ஜன்னல் திறந்து
உட்காரும்போது
தாழ்வார விட்டத்துக் கூட்டில்
விளையாடும்
ஊடல் குருவிகள்
தென்றலின் பாடலுக்குத்
தப்பாமல் தலையாட்டும்
தொட்டிப் பூக்கள்
வாசல் வரை வந்து
வாலாட்டி வழியனுப்பும்
எதிர் வீட்டு நாய்க்குட்டி
கட்டுமான இருக்கன்களைப் பிளந்து
வேர்விட்டு முளைத்திருக்கும்
பக்கத்து வீட்டு சுவர் மரக்கன்று
நேற்றைய உழைப்பின் கூலிக்காக
முதலாளி வீட்டு வாசலில்
காத்துக்கிடக்கும் தொழிலாளி
தட்டில் விழுந்த ஒற்றை நாணயத்தை
திரும்பித் திரும்பித் தடவிப் பார்க்கும்
பிச்சைக்காரன்
எல்லாப் பரப்பிலும்
சிதறிக்கிடக்கின்றன
காலம் ஏற்கனவே எழுதிய
கவிதைகள்.
நேசன்
************************************************************
யார் முதலில்
ஒரு விடுமுறை நாளின்
மழை ஓய்ந்த மாலைப் பொழுது
நகர வாழ்வின்
நரக ஓட்டங்களற்ற ஓய்வு
சிரிப்பும் களிப்புமாக
சிற்றுண்டி இடையே சிறு சர்ச்சை
'யார் முதலில் சாப்பிட்டது?'
நாட்டாமை செய்ய
நயமாக முன் வந்தது
நான்கு வயதுப் பெண் குழந்தை.
அப்பாவின் காதருகே
தளிர்க்கரம் குவித்து
செவ்விதழ் விரித்து
திருவாய் மலர்ந்தது
'அப்பா நீதான் ஃபர்ஸ்ட்'
அதேபோல் அம்மாவிடமும்
'அம்மா நீதான் ஃபர்ஸ்ட்'
அண்ணாவிடமும்கூட
'அண்ணா நீதான் ஃபர்ஸ்ட்'
இறுதியாக
தன் காதருகே
தளிர்க்கரம் குவித்து
தீர்ப்பைத் திருத்திச் சொன்னது
'நான்தான் ஃபர்ஸ்ட்'
எஸ்.பிரேமலதா
************************************************************
நீர்த்துவம்
தாமிரபரணியும்
குறுக்குத்துறையும்
உனக்குப் புரியாது.
காவிரியும்
கொள்ளிடமும்
எனக்குத் தெரியாது.
பாலாறு வந்தாலும்
வாராதே போனாலும்
அதுபோல வாராது.
வெட்டாறும்
சங்கராபரணியும்
அவனுக்குப் புரியாது.
நதியில்லாதவனுக்கு
சிறுவாணிபோல் அமையாது.
குளத்தின் சாகசங்கள்
ஏரிகள் அறியாது.
ஏரியின் படகுக்குகோ
வேறெதுவும் ஆகாது.
கடலின் சூட்சுமங்கள்
கிணறுகள் உணராது.
கிணற்று மீனின்
ரகசியங்களை
கடல் மீன் அறியாது.
அருவியின்
உன்மத்தத்தைச்
சுனை நீர் தாங்காது.
இருந்தால் மட்டும் வரும்
குழாய் நீர் போல
ஒரு நீரும் கிடையாது.
அக்வாஃபினா பக்கத்தில்
பிஸ்லெரி நெருங்காது.
நீரெல்லாம் ஒன்றானாலும்
நீரெல்லாம் ஒன்றாகாது.
சுந்தர்ஜி
Download As a PDF

1 comments:
உண்மையா என்று தெரியவில்லை ....
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
Post a Comment